அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி செய்தார்  

Estimated read time 0 min read

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரத்தில் நடத்துவது உறுதியாகி உள்ளது.
இது தேசத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் பெரும் பெருமைக்குரிய தருணம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.
கடுமையான மதிப்பீட்டுச் செயல்முறைக்குப் பிறகு, காமன்வெல்த் விளையாட்டுகளின் நிர்வாகக் குழு புதன்கிழமை (அக்டோபர் 15) அகமதாபாத்தை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இறுதியான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 26 அன்று கிளாஸ்கோவில் நடைபெறும் பொதுச் சபையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் இந்தச் செய்தியைக் கொண்டாடி, இந்தப் போட்டிகளை நடத்துவது பிரதமர் மோடியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டுத் திறமைகளை வளர்க்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author