ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹித் ஒலியுல்லாஜ் தர்கா அமைந்துள்ளது.
இந்த தர்காவில் வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா இன்று தொடங்கிய நிலையில் நாளை அதிகாலையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார்.