தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சுட்டெரித்து வந்த வெயிலின் தாக்கம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது.
மே மாதம் நெருங்கி வரும் சூழலில், கத்திரி வெயில் தொடங்கும் முன்னரே வெப்பம் தகித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, வெயிலால் தவித்து வரும் மக்களுக்கு ஒரு சிறிய ஆறுதலான செய்தியை வழங்கியுள்ளது.
அடுத்த சில தினங்களுக்குத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை
