ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் பலி  

Estimated read time 0 min read

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவலர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆவர். இதில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இரவு 11:20 மணியளவில், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சட்டப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தச் சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author