மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Estimated read time 1 min read

மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை அடுத்த அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநாடு நடைபெறவுள்ள அம்மா திடலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முருகனின் அறுபடை வீடுகளுடைய மாதிரிகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி வருகை தந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author