பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அரசு, அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.