நாடு முழுவதும் 3395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…  

Estimated read time 0 min read

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இதனால் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் உலகில் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவுகிறது. இதுவரையில் 3395 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கொரோனா தொற்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி கேரளாவில் 1336 பேருக்கும், மகாராஷ்டிராவில் 467 பேருக்கும், குஜராத்தில் 265 பேருக்கும், டெல்லியில் 375 பேருக்கும், தமிழ்நாட்டில் 185 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 205 பேருக்கும், உத்திரபிரதேசத்தில் 117 பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி டெல்லி, கேரளா, கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மேலும் இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author