400மீ தடை தாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை…. வெண்கல பதக்கம் வென்று சாதனை…!!! 

Estimated read time 0 min read

தென்கொரியாவின் குமி நகரில் 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 59 பேர் கொண்ட இந்திய அளவில் 9 தமிழக வீரர்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார்.

இதில் அவர் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். அவர் 400 மீட்டர் தூரத்தை 56.46 வினாடிகளில் கடந்தார். இந்த போட்டியில் அவர் கால் வீக்கத்துடன் ஓடி 400 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற வீராங்கனைக்கு அவரின் சகோதரி நித்தியா இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author