முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!

Estimated read time 0 min read

மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக கூட்டத்தைக் காட்ட, வெளியூரில் இருந்து திமுக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்திற்காக வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோவிற்காக கூட்டத்தை காட்ட, வெளியூர்களில் இருந்து லாரிகள் மூலம் ஆட்களை திமுக நிர்வாகிகள் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்திற்குள் அடைத்து, பெயர் அடிப்படையில் தலைக்கு 200 ரூபாய் பணம் கொடுத்து வரிசையில் நிறுத்தியுள்ளனர்.

மேலும், சிறுவர்களின் கைகளில் பலூன்களை கொடுத்தும் முதலமைச்சரை வரவேற்பதற்காக திமுகவினர் நிறுத்தியுள்ளனர். முதலமைச்சரின் ரோடு ஷோவிற்கு கூட்டத்தை காட்ட பணத்திற்கு ஆட்களை அழைத்து வந்து காத்திருக்க வைத்த திமுகவினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வியாபாரிகள் அவதியடைந்தனர். இந்த ரோடு ஷோவிற்காக வில்லாபுரம் முதல் ஆரப்பாளையம் வரை சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டதால் கடைகள், வணிக நிறுவனங்களை வியாபாரிகள் அடைத்து சென்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author