மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

Estimated read time 0 min read

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவதாகவும், கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் வழங்கப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் தேர்தல் அலுவலராகவும், சட்டப்பேரவையின் இணைச் செயலாளர் ரமேஷை தேர்தல் துணை அலுவலராகவும் நியமித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் அறிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author