சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

Estimated read time 0 min read

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றைப் பிரதமர் மோடி நட்டு வைத்தார்.

சமீபத்தில் குஜராத் மாநிலம், கட்ச் நகருக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி, 1971ஆம் ஆண்டு போரின்போது துணிச்சலை வெளிப்படுத்திய பெண்களைச் சந்தித்து கலந்துரையாடியனர்.

அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பெண்கள் குழுவினர், சிந்தூர் மரக்கன்றை பரிசாக வழங்கினார்.

இதனால், நெகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி, சிந்தூர் மரக்கன்றை தனது இல்லத்தில் நடுவேன் என பெண்களிடம் உறுதியளித்தார்.

அதன்படி, சர்வதேச சுற்றுசூழல் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை பிரதமர் மோடி நட்டுவைத்தார். இந்த வீடியோவை பிரதமர் அலுவலகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author