மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

Estimated read time 0 min read

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் சாயம் கலந்த குடிநீர் கேன்களுடன் வந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மாதந்தோறும் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் சாயம் கலந்த குடிநீர் கேன்களுடன் வந்து கலந்து கொண்டனர்.

காவிரி ஆற்றில் சாயக் கழிவுநீரைக் கலக்கும் சாயப்பட்டறைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author