சீன-மியான்மார் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், மியான்மார் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில், இரு நாட்டுறவின் வளர்ச்சியில் சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. மியான்மாருடன் இணைந்து கைகோர்த்து இரு நாட்டுறவின் 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நேரத்தில் சீன-மியான்மார் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை மேலும் ஆழமாகவும் பயனுள்ளதாகவும் முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைக் கொண்டு வரச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை விரைவுபடுத்தி மேலும் வலிமை, நெகிழ்வு மற்றும் ஒன்றுக்கொன்று நன்மை தரும் கூட்டாளியுறவை உருவாக்க எதிர்பார்ப்பதாக மின் ஆங் ஹ்லைங் கூறினார்.
அதே நாள், சீனத் தலைமை அமைச்சல் லீச்சியாங்கும் மின் ஆங் ஹ்லைங்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.