தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…

Estimated read time 1 min read

மேற்கு திசை காற்றின் வேகத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிற 10-ம் தேதி அதாவது நாளை முதல் 5 நாட்களுக்கு பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author