ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து காஜியாபாத் நோக்கிச் சென்ற ரயில் எண் 64419, மத்திய டெல்லியில் உள்ள சிவாஜி பாலம் நிலையம் அருகே தடம் புரண்டது.
ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து காஜியாபாத் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், மத்திய டெல்லியில் உள்ள சிவாஜி பாலம் நிலையம் அருகே தடம் புரண்டது.
ரயிலின் நான்காவது பெட்டி தண்டவாளத்தில் விட்டு விலகிச் சென்றது. ஆனால் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தண்டவாளப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட அவசரகால மீட்புக் குழுக்கள் சிறப்பு கிரேன்கள் மூலம் தடம் புரண்ட பெட்டியைத் தூக்கி மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டன. விபத்தால் பல ரயில்கள் தாமதமாகவும், மாற்றுப்பாதையிலும் இயக்கப்பட்டன.
ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறிய வடக்கு ரயில்வே முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. தண்டவாளக் குறைபாடுகள், இயந்திரக் கோளாறு அல்லது சிக்னல் பிழை ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.