17வது நீரிணை கருத்தரங்கு ஜுன் 16ம் நாள் சீனாவின் ஷியா மன் நகரில் தொடங்கியது.
சீனாவின் கோ மின் டாங் கட்சியின் முன்னாள் தலைவர் மா யீங் ஜியு, தைவான் பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி பங்கேற்றார்.
அவர் உரைநிகழ்த்துகையில், இரு கரை மக்களின் உணர்ச்சியும் தொடர்பும் துண்டிக்கப்படாது. 1992ம் ஆண்டின் பொது கருத்து, தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பது ஆகியவற்றின் அடிப்படையில், இரு கரையின் அமைதி வளர்ச்சியில் ஊன்றி நின்றால் தான், ஆழமான ஒத்துழைப்புடன் இரு கரைகள், அமைதி மற்றும் கூட்டு வெற்றி பெறும் நிலைமையை உருவாக்கும். எதிர்காலத்தில் மேலதிக தைவான் இளைஞர்கள் பெருநிலப்பகுதிக்குச் செல்ல வேண்டும். அதைப் போல், பெருநிலப்பகுதி மக்களும் தைவானுக்கு வருக என்று விருப்பம் தெரிவித்தார்.