ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கினால், பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
இந்த அறிக்கையை ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) முக்கிய தளபதியுமான ஜெனரல் மொஹ்சென் ரெசாயி தொலைக்காட்சியில் தோன்றியபோது வெளியிட்டார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் ஏவுகணை பரிமாற்றங்களுக்கு மத்தியில், ஈரானைப் பாதுகாப்பதற்காக பாகிஸ்தான் அணுசக்தி பழிவாங்கலை உறுதியளித்துள்ளதாக ரெசாயி வலியுறுத்தினார்.
இருப்பினும், பாகிஸ்தான் உடனடியாக இந்த கூற்றை மறுத்துள்ளது.
இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உதவும் எனக் கூறிய ஈரான்
