2033க்குள் யுரேனியம் இறக்குமதியை நான்கு மடங்கு அதிகரிக்க இந்தியா திட்டம்  

Estimated read time 0 min read

எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, இந்தியா 2033 ஆம் ஆண்டுக்குள் யுரேனிய இறக்குமதியை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி மொத்தம் 9,000 மெட்ரிக் டன்களை இறக்குமதி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் அரசாங்கத்தின் ₹20,000 கோடி தேசிய அணுசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது நாடு முழுவதும் அதிகரித்து வரும் அணு உலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
4.25 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யுரேனிய இருப்பு இருந்தபோதிலும், மோசமான தாது தரம் மற்றும் அதிக சுரங்க செலவுகள் போன்ற சவால்கள் இந்தியா சர்வதேச சப்ளையர்களை அதிகம் நம்பியிருக்க வேண்டிய சூழலில் தள்ளியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author