கிரீஸ் : மீன்பிடி படகுகளில் வந்த 600-க்கும் மேற்பட்ட அகதிகள் மீட்பு!

Estimated read time 1 min read

கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டுக் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இந்த 2 மீன்பிடி படகில் பயணித்த அகதிகள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல் இதுவரை வெளியாகவில்லை. வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் பயணிக்கின்றனர்.

இதில் பெரும்பாலான மக்கள் கடத்தல்காரர்களின் உதவியோடு கப்பல்கள் மூலம் பயணம் செய்வதால், வழியில் ஏற்படும் ஆபத்துக்களில் சிக்கி பலர் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author