பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Estimated read time 0 min read

இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தொடர்ந்து அவர், டெல்லியில் பிரதமர் மோடியை, சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பின்லாந்து அதிபர் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பின்லாந்து கட்டட கலைஞர்களின் ஒத்துழைப்புடன், செனாப் நதியின் மீது உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை கட்டியதாக தெரிவித்தார். மேலும் இந்திய மாணவர்களுக்கு விருப்பமான இடமாக பின்லாந்து மாறி வருவதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author