சீன-சிங்கப்பூர் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 35 ஆண்டுகளாக, இரு நாட்டுறவு உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. இவ்வாண்டின் ஜுன் திங்கள், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தலைமையமைச்சராகப் பதவி ஏற்றப்பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது சீனப் பயணம் இது என்பது மட்டுமல்லாமல், இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவுக்கான முக்கிய உயர்நிலை பரிமாற்றமாகவும் அமையும்.
இது குறித்து, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த போது அவர் கூறுகையில், பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு மற்றும் புரிந்துணர்வு என்ற அடிப்படையில், சீனாவும் சிங்கப்பூரும் வலிமைமிக்க நெருங்கிய கூட்டாளி உறவை நிலைநிறுத்தி வருகின்றன. அதனால், இந்தப் பயணத்தின்போது, சீனத் தலைவர்களுடன் ஆழமாகப் பரிமாற்றம் மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன் என்றார்.
ஒன்றுக்கொன்று முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளிகளாக, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மானுடவியல் உள்ளிட்ட துறைகளில், சீனாவும் சிங்கப்பூரும் ஆழமாகப் பரிமாற்றத்தை மேற்கொண்டு செழுமையான சாதனைகளைப் பெற்று வருகின்றன. இது குறித்து அவர் கூறுகையில், நெருங்கிய கூட்டாளி உறவின் அடிப்படையில் இரு நாடுகள் மேற்கொண்ட ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர, இரு தரப்பும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் தேடி வருகின்றன. அதனால், எதிர்காலத்தில் இரு நாட்டு ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதற்கு நம்பிக்கை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.