ஐக்கிய அரபு அமீரகம் தனது அரசு நிர்வாகத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
வரும் 2028 ஆம் ஆண்டுக்குள், நாட்டின் ஒட்டுமொத்த அரசு சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் 50 சதவீதத்தை முழுவதுமாகத் தன்னாட்சி கொண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஜென்டிக் ஏஐ) மூலம் இயக்கப்போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலக அளவில் இவ்வளவு பெரிய அளவில் அரசு நிர்வாகத்தை ஏஐ மூலம் இயக்கும் முதல் நாடு இதுவாகும் என்று கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
