முன்னாள் பிரிட்டன் தலைமையமைச்சர், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் வாங்யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையத்தின் தலைவருமான வாங்யீ 23ஆம் நாளில், பெய்ஜிங் மாநகரில், முன்னாள் பிரிட்டன் தலைமையமைச்சர் டோனி பிளேயர், இந்திய தேசியப்  பாதுகாப்பு ஆலோசகரும் சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான இந்திய சிறப்பு தூதருமான அஜித் தோவல் ஆகிய இருவருடன் முறையே சந்திப்பு நடத்தினார்.

 

டோனி பிளேயருடன் சந்தித்த போது, வாங்யீ கூறுகையில்,

 

பிரிட்டனுடன் இணைந்து, இரு நாடுகளின் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளை கூட்டாக நடைமுறைப்படுத்தி, சீன-பிரிட்டன் உறவின் சீரான, நிதானமான வளர்ச்சியை விரைவுபடுத்த சீனா விரும்புவதாக வாங்யீ தெரிவித்தார்.

 

அஜித் தோவலுடன் சந்தித்த போது, வாங்யீ கூறுகையில்,

 

கடந்த அக்டோபர் திங்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய தலைமையமைச்சர் மோடி ஆகிய இருவரும், காசான்னில் பேச்சுவார்த்தையை நடத்தி, இரு தரப்புறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர். சீனாவும் இந்தியாவும் அச்சுறுத்தும் நாடுகள் அல்ல. ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கும் நாடுகளாகவும் ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுகளாகவும் உள்ளன என்றார். உணர்வலை தன்மை வாய்ந்த பிரச்சினைகளை சரியாகத் தீர்த்து, எல்லை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.

 

நீண்டகாலம் மற்றும் நெடுநோக்குப் பார்வையில் இரு தரப்புறவைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்ந்து கொண்டு, பொது நலன்களை கூட்டாக விரிவாக்க வேண்டும் என்று அஜித் தோவல் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author