மே 31ஆம் நாள் ஷங்கரீல பேச்சுவார்த்தையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹேக்செஸ் சீன அச்சுறுத்தல் கோட்பாடு, தைவான், தென் சீன கடல் ஆகியவை குறித்து அவதூறு கூறினார்.
ஹேக்செஸ்ன், இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் அமைதியான வளர்ச்சியை நனவாக்கும் விருப்பத்தை அலட்சியம் செய்து, சீன அச்சுறுத்தல் கோட்பாட்டை மிகைப்படுத்தி, ஆத்திரைமூட்டும் செயலை மேற்கொண்டுள்ளார். இது குறித்து சீனா அமெரிக்காவுக்குக் கடுமையான எதிர்ப்பையும் கண்டத்தையும் தெரிவித்துள்ளது. உண்மையில், அமெரிக்கா மேலாதிக்க நாடாகும். இப்பிரதேசத்திலுள்ள நாடுகள், அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கும் முயற்சிக்கு அமெரிக்கா மதிப்பு அளித்து, இப்பிரதேசத்தின் நிதானத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறினார்.