நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

Estimated read time 1 min read

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 300 பொறியியல் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான கல்வி விதிமுறைகள்-2025யை அண்ணா பல்கலைக்கழக கல்வி கவுன்சில் அண்மையில் அங்கீகரித்து இருக்கிறது.

இந்த புதிய கல்வி விதிமுறைகள் நடப்பு கல்வியாண்டில் இருந்து முதல் 2 செமஸ்டர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர இருக்கும் அனைத்து பி.இ., பி.டெக். மாணவர்களுக்கும் வெளிநாட்டு மொழி, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் வெளிநாட்டு மொழி படிப்புகளை வழங்கி வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இணைப்பு கல்லூரிகளுக்கு இதை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய 2-வது செமஸ்டரில் ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் டச்சு ஆகிய வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் படிக்க வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author