செப்டம்பர் 3ஆம் நாள் காலை, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் பெய்ஜிங்கின் தியென் அன் மன் சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இன்று நாங்கள் ஒன்றுகூட்டி வரலாற்றை நினைவில் கொண்டு, தியாகிகளை நினைவு கூர்ந்து, அமைதியைப் பேணிமதித்து, ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர், உலக பாசிச எதிர்ப்பு போரின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. மனித குலத்தின் நாகரிகத்தைப் பேணிக்கா, சீன தேசம் மாபெரும் தியாகத்துடன், உலக அமைதிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. சீன தேசம், ஆதிகத்தைக் கண்டு பயப்படாது, தற்சார்ப்பு மற்றும் தன்வலிமையைக் கொண்ட நாடு இது. சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சி தடுக்கப்பட முடியாததாகும். மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உன்னத இலட்சியம், வெற்றி பெறுவது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.