இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தலைமைப் பொறுப்பில் நிலைபெறப் போதுமான அவகாசத்தை வழங்க பிசிசிஐ தேர்வுக்குழு ஆர்வமாக உள்ளது.
ரோஹித் ஷர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையே இப்படி கருதப்படுவதற்குக் காரணமாகும். வரவிருக்கும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர், ரோஹித்தின் கடைசித் தொடராக இருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது.
ரோஹித் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், அடுத்த உலகக் கோப்பையில் அணியைத் தலைமை தாங்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இறுதி முடிவு தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு
