சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) [மேலும்…]
துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டுக்கான மன்றக் கூட்டத்துக்காக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 12ஆம் நாள் வாழ்த்து செய்தி [மேலும்…]
சீனாவின் நான்ஜிங்கில் 1937ஆம் ஆண்டில் நிகழ்ந்த படுகொலைகளில் மரணமடைந்தோருக்கான 12ஆவது தேசிய நினைவுதினம் தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவொ ஜியாகுன் 12ஆம் [மேலும்…]
இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன. எதிர்காலத்தில் கடுமையான ‘நிலத்தில் புதைவு’ [மேலும்…]
புதுச்சேரியில் 2025-2030ம் நிதியாண்டு வரை யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்கிறது. மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியானது. புதுச்சேரி புதுச் சேரியில் வீட்டு உபயோக [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் அதிகாரப்பூர்வமாற்ற மூத்த அதிகாரிகள் கூட்டம்(APEC informal senior officials‘ meeting) டிசம்பர் 11,12 ஆகிய நாட்களில் குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் [மேலும்…]
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் பல முக்கிய தேசியக் [மேலும்…]