சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியை தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் தேமுதிக பொருளாளரும் எம்பியுமான எல்.கே.சுதீஷ். அவர் மோடியிடம் [மேலும்…]
தமிழ் பாரம்பரியத்தில் திருக்கோவில் வழிபாட்டுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான மகத்துவமும் வழிமுறைகளும் உண்டு. வாரத்தின் ஏழு நாட்களிலும் குறிப்பிட்ட இறைவனை, அதற்குரிய கிழமைகளில் சென்று [மேலும்…]
கேரளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்தித்துள்ளது. பூஞ்ஞார், [மேலும்…]
தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தவெக [மேலும்…]
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டினாலே அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ரசிகர்களின் நரம்புத் தளர்ச்சியூட்டும் உணர்ச்சிப் போராட்டமாகும். அதேபோல, [மேலும்…]
வரும் ஆகஸ்ட் 12, 2026 அன்று ஐரோப்பிய கண்டத்தில் அரிதிலும் அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சரியாக [மேலும்…]
தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாது லா கணவாய், எல்லை தாண்டிய வர்த்தகத்திற்காக சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஞாயிற்றுகிழமை [மேலும்…]