சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய [மேலும்…]
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் [மேலும்…]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி தேவையைச் சீரமைக்க, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால இடைவெளியை [மேலும்…]
வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) 2026-ஆம் ஆண்டில் கூடுதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு. ஒரு நடிகரை நம்பி ரசிகர்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள்… 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தினர் [மேலும்…]
பாஜகவை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும். தேர்தல் நேர கூட்டணி வேறு கட்சியின் கொள்கைகளும் சித்தாந்தங்களும் வேறு என [மேலும்…]
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் [மேலும்…]
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என, [மேலும்…]