சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கலானது. நீதிபதி எல்.விக்டோரியா [மேலும்…]
கோவையில் தமிழக பாஜக மையக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து பாஜக மையக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் [மேலும்…]
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்புப் பதிப்பு (Limited-edition) பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் [மேலும்…]
நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. [மேலும்…]
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான தற்போதைய மோதல், நாட்டில் ஒரு பெரிய வேலைவாய்ப்பு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் போர், [மேலும்…]
சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் ஏப்.,24 கொடைக்கானலுக்கு வந்தார். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு [மேலும்…]
உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக பார்ப்பது தங்கத்தை மட்டும் தான். அதனாலேயே உலக சந்தையில் தங்கத்தின் [மேலும்…]