சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட [மேலும்…]
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதான ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து உள்ளதாக வலைப்பேச்சு செய்தி [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜப்பானின் புதிய வெளியுறவு அமைச்சர் மோடேகி தோஷிமிட்சு உடன் [மேலும்…]
8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. 8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. [மேலும்…]
மோந்தா புயல் ஆந்திராவில் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தெற்கு தென்கிழக்கே 100 கிலோமீட்டர் [மேலும்…]
கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை குடியரசு தலைவர் [மேலும்…]
ஐந்தாண்டு திட்டத்தை அறிவியல் முறையில் வகுத்து, தொடர்ச்சியாக செயல்படுத்துவது, சீன ஆட்சிமுறையின் முக்கிய அனுபவமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், அக்டோபர் 28ஆம் நாள், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 28ஆவது சீன-ஆசியான் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், [மேலும்…]