சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
கல்வி என்பது இன்று மிக விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், அமெரிக்காவின் ஆல்பா பள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது. இந்தப் பள்ளியில் [மேலும்…]
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் [மேலும்…]
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி [மேலும்…]
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நீடித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $150-க்கும் மேல் உயரக்கூடும் என்று பொருளாதார [மேலும்…]
இந்திய விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்க அதிபருக்குக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க [மேலும்…]
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது நடத்தப்பட்ட சரமாரி ட்ரோன் தாக்குதல்களால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமாபாத்தின் பைசாபாத், ஐ-8, ஐ-9 மற்றும் [மேலும்…]
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய [மேலும்…]