தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 56. கடந்த 2 மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகி்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன் அவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர்.
மேலும் பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.
“தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/Bg0zRae5am
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 24, 2025
“தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/Bg0zRae5am
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 24, 2025