TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு  

Estimated read time 1 min read

கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த எண்ணிக்கையை 41 ஆக உயர்த்தியுள்ளது.
இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆரம்பத்தில் 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இருந்த இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 13 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் அடங்குவர்.
இந்தியாவில் இதுவரை நடந்த பெரிய கூட்ட நெரிசல் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தற்போது, கரூர் அரசு மருத்துவமனையில் 11 பேர் ICU-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 90க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author