மீட்சியடைந்த சீன-இந்திய பயணியர் விமான சேவை

சீன இஸ்தன் பயணியர் விமான நிறுவனம், சீனாவின் ஷாங்ஹாய் மாநகரிலிருந்து இந்திய கலைநகர் புதுதில்லிக்கு போய்வந்த பயணியர் விமான சேவையை நவம்பர் 9ஆம் நாள் மீண்டும் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வாரத்தின் புதன்கிழமை, சனிகிழமை, ஞாயிறுகிழமை ஆகிய நாட்களில் இந்த விமான சேவை இயங்கும். ஷாங்ஹாயிலிருந்து புதுதில்லிக்குப் புறப்படும் விமான எண் எம் யு 563, 12:50 மணியளவில் ஷாங்ஹாயிலிருந்து புறப்பட்டு இந்திய நேரம் 17:45 மணிக்கு புதுதில்லிக்குச் சென்றடையும். புதுதில்லியிலிருந்து புறப்பட்ட விமான எண் எம் யு 564 ஆகும். இது இந்திய நேரம் 19:55 மணியளவில் புதுதில்லியிலிருந்து புறப்பட்டு பெய்ஜிங் நேரம் மறுநாள் 4:10 மணிக்கு ஷாங்ஹாய் மாநகருக்கு வந்தடையும். பயணிகள் தங்கள் விமான சீட்டுகளைப் இப்போது பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author