சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்  

Estimated read time 1 min read

புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ எனப் பல்வேறு கவிதை வடிவங்களில் முத்திரை பதித்த அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு தமிழன்பன், ‘வணக்கம் வள்ளுவ’ என்ற அவரது நூலுக்காக 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ஆவார்.
அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறுகதை மற்றும் புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், திறனாய்வாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பல துறைகளில் தடம்பதித்த பன்முக ஆளுமை கொண்டவர்.

Please follow and like us:

You May Also Like

More From Author