தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Estimated read time 0 min read

வங்கக் கடலில் இன்னும் இரண்டு நாள்களில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி (நெல்லை) மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனுடன், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாகப் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்றி, அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், புயல் சின்னத்தின் நகர்வுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிலைமைக்கு ஏற்ப அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author