நவம்பர் 25ஆம் நாள் மத்தியம் 12 மணி 11 நிமிடத்தில், ஷென்சோ 22 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் மனிதரை விண்வெளிக்கு ஏற்றிச்செல்லும் திட்டப்பணியின் கீழ் அவசர தேவைக்காக விண்கலனை விண்ணில் செலுத்துவது இதுவே முதன்முறையாகும்.
விண்வெளி உணவுப் பொருட்கள், மருந்துகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் முதலியவை ஷென்சோ 22 விண்கலம் மூலம் அனுப்பபட்டுள்ளன. ஷென்சோ 20 விண்கலக் கப்பலின் ஜன்னலில் சிறிய விண்வெளி குப்பைகளால் ஏற்படுள்ள பாதிப்பை சரி செய்வதற்கான சாதனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தவிரவும், அதே விண்கலத்தில், ஷென்சோ 21 விண்வெளி வீரர் குழுவினர்கள் பூமிக்குத் திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
