“விஜய்யின் அடுத்த நகர்வு” அதிருப்தியில் இ.பி.எஸ். அணி… 2026 தேர்தலுக்கு முன் நடக்கும் அதிரடி..!!! 

Estimated read time 0 min read

அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்துள்ளது, அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் இணைந்ததன் மூலம், தவெகவின் தலைவர் விஜய், தனது அடுத்தகட்ட வியூகத்தை வகுக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து மண்டலங்களிலும் செல்வாக்குமிக்க அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளைத் தன்பால் ஈர்க்கும் பொறுப்பு செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் விரைவில் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் செங்கோட்டையன் பகிரங்கமாகக் கூறியுள்ளார். விஜய்யின் இந்தத் திடீர் நகர்வு, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் மூலம் சில முக்கிய தலைவர்கள் விரைவில் கட்சி மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அடுத்து வரும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் அ.தி.மு.க.விற்கு பலவீனமான சூழ்நிலையை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

த.வெ.க.வின் இந்த திடீர் எழுச்சி, அ.தி.மு.க.வின் பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க. தரப்பிலும் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் இருந்தே வலுவான அரசியல் அடித்தளத்தை அமைக்க விஜய் காய் நகர்த்துவதும், அதற்கு மூத்த அரசியல் தலைவர்கள் துணை நிற்பதும் எதிர்காலத் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author