பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த மூன்று நாள் பயணத்தில் இரண்டு கண்டங்களில் உள்ள நாடுகளைச் சந்திப்பது, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பிராந்தியங்களில் இந்தியாவின் இராஜதந்திர இருப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
பயண திட்டத்தின்படி, பிரதமர் மோடி ஜோர்டானுக்கு டிசம்பர் 15-16 அன்றும், எத்தியோப்பியாவுக்கு டிசம்பர் 16-17 அன்றும், ஓமனுக்கு டிசம்பர் 17-18 அன்றும் பயணம் செய்கிறார்.
பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்: முக்கிய நோக்கம் என்ன?
