மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையைக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
டெல்லியில் உள்ள குடியரசு துணை தலைவர் மாளிகையில் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
