முதுமுனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப.

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
*****
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769.
மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224
விலை ரூபாய் 150

இரவியைப் போற்றுதும்!
*****
இரவி இலக்கியத்தில் இதயத்தைப் பதித்து வைத்திருக்கும் அரசுப் பணியாளர். பணியைத் தாண்டி சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டு. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் சிரமம் என்று சொல்லாமல் சிறப்பாக செய்து முடித்து சிராய்ப்புகளை வெளியே காட்டிக் கொள்ளாத அவரை புலிப்பால் இரவி என்று அன்புடன் மற்றவர்கள் அழைப்பதும் உண்டு. ஐம்பது நூல்களைப் பொறுக்கி எடுத்து அவற்றைப் பற்றிய உற்சாக வரிகளை புத்தகம் போற்றுதும் என்கிற தலைப்பில் நயமாக விமர்சனம் செய்து இருக்கிறார். அவர் கவிதைகளின்பால் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் கவிதை நயத்தோடு மதிப்புரையை அணுகியிருப்பது பல இடங்களில் தெரிகிறது. இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் சமகால இலக்கியத்தின் சாரத்தைப் பருகிய நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. மூலப் புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. இரவி கவிதைகளோடு நின்று விடாமல் சிறு கதை, புதினம் என்று அவருடைய படைப்புலகத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
.

Please follow and like us:

You May Also Like

More From Author