சீனத் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாராட்டு மாநாடு 2026ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி அறிவியலாளர் ஹெர்ஸோக் 2025ஆம் ஆண்டுக்கான சீன சர்வதேச அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பரிசு பெற்றார். சீனா வெளிநாட்டு அறிவியலாருக்கு வழங்கும் மிக பெரிய அறிவியல் கௌரவம் இதுவாகும்.
இம்மாநாட்டின் போது, ஹெர்ஸோக் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் சீன நகரங்களின் திட்டமிட்டல் பணியில் சேர்ந்தது என் வாழ்நாளில் மிக அருமையான நினைவாகும் என்றார். சீனாவில் அதிகமான உயர் நிலை அறிவியல் ஆய்வாளர்கள் குவிந்துள்ளனர். இது மாற்றத்தைக் கொண்டு வரும். மேலும், நெடுநோக்கு நடைமுறையாக்கத்தில் சீனா வலிமையான திட்டத்தைக் கொண்டுள்ளது. இதுவும் சீனாவின் சிறப்பம்சமாகுமென கருதுவதாக அவர் தெரிவித்தார்.
