தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி பயணத்தை முடித்து விட்டு, வரும் 16-ஆம் தேதி ஆளுநர் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏ பதவி இழந்ததால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. அவரை மீண்டும் அமைச்சராக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி, ஆளுநருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author