தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசய்யா மனைவி காலமானார்:

Estimated read time 1 min read

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கே. ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி (86), உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் திங்கள்கிழமை காலமானார். வயது முதிர்வு சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது இல்லத்தில் உயிர் துறந்தார்.

“>

கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை ரோசய்யா தமிழக ஆளுநராகப் பதவி வகித்த காலத்தில், அவருடன் இணைந்து சிவலட்சுமியும் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுச் செய்தியறிந்த ஆந்திரம், தெலங்கானா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்

Please follow and like us:

You May Also Like

More From Author