பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
புண்ணிய பூமியாம் பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். இந்த வரிசையில் தோன்றியவர்தான் ‘சுவாமி விவேகானந்தர்’. அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,’ என்றார்.
“நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்” என முழங்கிய ‘தேசபக்த ஞானி’ விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரது வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.
சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
செங்கோட்டையன் அதிமுகவில் ஒற்றுமைக்காக தான் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
நாம் தமிழர் கட்சியினர் புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, [மேலும்…]
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா [மேலும்…]
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா நாடு சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 [மேலும்…]
கடந்த சில நாட்களில் உலக நாடுகள் சீனாவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்துகின்றது. உலகின் 2ஆவது பொருளாதார நாடான சீனாவுடன் மேலதிகமான நாடுகள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள [மேலும்…]