பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
புண்ணிய பூமியாம் பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். இந்த வரிசையில் தோன்றியவர்தான் ‘சுவாமி விவேகானந்தர்’. அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,’ என்றார்.
“நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்” என முழங்கிய ‘தேசபக்த ஞானி’ விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரது வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.
99-வது ஆஸ்கர் விருதுகளின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக, சந்தோஷ் தேவகார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான மராத்தி த்ரில்லர் [மேலும்…]
கும்பகோணம் அருகே உள்ள வளையப்பேட்டை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில், ஆன்மீகச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் வாய்ந்த ஒரு திவ்யமான தலமாகும். [மேலும்…]
சென்னை தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவின் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. [மேலும்…]
பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சியில் வசித்து வருகிறார். [மேலும்…]
சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 42 [மேலும்…]
‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜனை நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். [மேலும்…]
ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நிலத்தில் திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமானதாகக் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு [மேலும்…]