பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
புண்ணிய பூமியாம் பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். இந்த வரிசையில் தோன்றியவர்தான் ‘சுவாமி விவேகானந்தர்’. அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,’ என்றார்.
“நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்” என முழங்கிய ‘தேசபக்த ஞானி’ விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரது வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும் என அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் [மேலும்…]
தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக, அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம் நவம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத [மேலும்…]
பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தியோடோரோ மற்றும் அவரது உறவினர்கள் மீது சீனா தடைகளை அறிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் [மேலும்…]
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுக்கத் தவெக என்றும் முன்னிற்கும்”னு ஒரு உருட்டு உருட்டுனீங்களே ஞாபகம் இருக்கா CM Saar? என விஜய்க்கு திமுக [மேலும்…]
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சந்திக்கிறார். மேகதாது அணைத் திட்டம், கர்நாடகாவின் குடிநீர் [மேலும்…]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதியான இன்று திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த [மேலும்…]