ரூ.5000 மானியம்…பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு எடுத்த அதிரடி முடிவு.. உடனே விண்ணப்பியுங்கள்..!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் பெண்கள் தங்கள் வீட்டிலிருந்தே சிறிய அளவில் தொழில் தொடங்கி வருமானம் ஈட்ட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்த மானியத்தைப் பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள், தங்கள் பகுதியிலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் தேவையான இதர ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அரசின் இந்த உதவியைப் பயன்படுத்தி பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author