இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். இது, ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.
இதில், முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதல்கட்ட முதன்மை தேர்வு இன்று தொடங்கி ஜனவரி 30-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதன்படி, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய நாட்களிலும் தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வெழுத 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) கடந்த 18-ந்தேதி இரவு என்.டி.ஏ. வெளியிட்டது. மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் சென்று அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வை எழுதுவோர் தங்கள் அட்மிட் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் புகைப்பட அடையாள சான்றுகளை எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
இணையவழி பட்டா மாறுதல், தானியங்கி பட்டா மாறுதல் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரபு, [மேலும்…]
விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) பொதுப் பங்குச் சந்தையில் தடம் பதித்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் [மேலும்…]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தான் [மேலும்…]
பின்லாந்தில் நடைபெற்ற கலதரந்தா பேச்சுவார்த்தையில் (Kultaranta Talks) கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியா மீதான மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். [மேலும்…]
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டம் வியாழக்கிழமை [மேலும்…]
கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கோப்பை தொடர், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் உற்சாகமாக ஆரம்பமானது. மெக்சிகோ, கனடா [மேலும்…]
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [மேலும்…]