பின்லாந்தில் நடைபெற்ற கலதரந்தா பேச்சுவார்த்தையில் (Kultaranta Talks) கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியா மீதான மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏன் எண்ணெய் வாங்குகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் சந்தையில் நிலவும் விலை மற்றும் இருப்பைப் பொறுத்தே எண்ணெய் வாங்குகிறேன்.
ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் பாரம்பரிய விநியோகஸ்தர்களான மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கியதால், சந்தையில் ரஷ்ய எண்ணெய் மட்டுமே அதிக அளவில் கிடைப்பதாக இருந்தது.
எனவே, சூழ்நிலைகள் எங்களை அந்த திசையில் தள்ளின.” என்று தெளிவுபடுத்தினார்.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஜெய்சங்கரின் அதிரடிப் பேச்சு!
