புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் புறக்கணிப்புகளால் சூழப்பட்டிருந்த நிதி ஆயோக் கூட்டங்களின் வரலாற்றில், இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் முற்போக்கான மாற்றமாகவும் அமைந்துள்ளது.
இம்முறை இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்களின் முதலமைச்சர்களும் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு “கூட்டுறவு கூட்டாட்சி” தத்துவத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான NITI Aayog கூட்டம்: அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பு
