அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக இணையத்தன் மூலம், தற்போதைய உலகம், முன்கண்டிராத அளவில் ஒரு “பூமி கிராமாக” மாறியுள்ளது.
உலகளவில் பல்வேறு நாடுகள் நெருக்கமாக ஒருங்கிணைந்து, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையாக உள்ளன. காலநிலை மாற்றம், நோய் பாதிப்பு, பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு முதலிய அறைகூவல்களை எந்த தனி நாடோ சமாளிக்க முடியாது. ஒத்துழைப்பு இதற்கு மாற்று வழிமுறை இல்லாத ஒரே ஒரு தீர்வு. மனித குலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய பொது சமூகம் எனும் முன்மொழிவு என்பதை நமக்கு நினைவூட்டும்.call
இந்த முன்மொழிவை சீனா வழங்குவது மட்டுமல்லாமல், அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. உள்நாட்டில், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம், உயிரின நாகரிக கட்டுமானம் முதலியவற்றை சீனா விரைவாக முன்னேற்றி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக கட்டியமைப்பதன் மூலம், உலக வளர்ச்சி முன்மொழிவு, உலக பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு, உலக ஆட்சிமுறை முன்மொழிவு ஆகியவற்றை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்தகைய முன்மொழிவுகளின் கீழ் விரிவான திட்டப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. ரயில்வே கட்டுமானம், பசுமையான ஒத்துழைப்புகளையும் சீனா வலுப்படுத்துகிறது. சீனாவின் இத்தகைய முயற்சிகள், உலகத்திற்கு நிதானத்தைக் கொண்டு வந்து, கூட்டு வளர்ச்சிக்கு உந்து ஆற்றலை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
