வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மற்றும் கோவையின் மலைப்பகுதிகளில் மிகக் கனமழையும், சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும்.
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், ஜூன் 10 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 10 வரை விடாமல் வெளுக்கப்போகும் மகா மழை!
