ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டம் பிப்ரவரி 10ஆம் நாள் முற்பகல் குவாங்சோ மாநகரில் துவங்கியது.
ஆசிய-பசிபிக் பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைத்து, கூட்டுச் செழுமையை முன்னேற்றுவது என்ற 2026ஆம் ஆண்டு ஏபெக் உச்சிமாநாட்டின் கருப்பொருளுக்கும், திறப்பு, புத்தாக்கம், ஒத்துழைப்பு ஆகிய முன்னேறிய துறைகளுக்கும் நடப்புக் கூட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. இக்கூட்டத்தில், பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புமுறைகளின் ஒத்துழைப்புகள் பன்முகங்களிலும் தொடக்கப்பட்டு, ஒத்துழைப்புகள் பற்றிய விரிவான தகவல்கள் விவாதிக்கப்படவுள்ளன. நவம்பவர் திங்கள் நடைபெறவுள்ள ஏபெக் உச்சிமாநாட்டுக்கு ஆயத்தம் செய்வது இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
