எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டால், மனித உரிமையின் காப்பாளர் என்ற அமெரிக்காவின் கலங்கரை விளக்கு உடைந்து நொறுங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலக இணையப் பயனர்களிடம் நடத்திய கருத்துக் கண்காணிப்பில், அமெரிக்க அரசியல் அமைப்பு முறையின் பொது மதிப்புகளின் அடித்தளம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாக 92 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், எப்ஸ்டீன் ஆவணங்களின் அம்சங்கள் குறித்து 85.1 விழுக்காட்டினர் அதிர்ச்சியைத் தெரிவித்தனர். இதுவரை, அவற்றில் ஈடுபட்ட அரசியல் மற்றும் வணிக பிரபலங்களிடம் சட்ட ரீதியில் புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. அதிகாரமுடையவர்களிடம் அமெரிக்காவின் நீதி அமைப்பு முறை இரட்டை வரையறையைக் கொண்டுள்ளதாக 95.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
